sireku

முழு­மை­யான அரிய சந்­திரகிர­க­ண­மொன்றை இன்று இலங்கையில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.இந்தக் கிர­க­ணத்தை அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஆபி­ரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு பசுபிக் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்கள் அவ­தா­னிக்க முடியும் என வானியல் அவ­தான நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
கொழும்பில் இந்த சந்­திர கிர­க­ணத்தை இன்று அதி­காலை 5.41 மணி­யி­லி­ருந்து காலை 10.52 மணி வரை அவ­தா­னிக்க முடியும் எனக் கூறப்­ப­டு­கி­றது. மேற்­படி சந்­திரகிர­கணம் 5 மணித்­தி­யாலம் 11 நிமி­டங்­க­ளுக்கு நீடிக்­க­வுள்­ளது.

அமெ­ரிக்கா, கனடா, மத்­திய மற்றும் தென் அமெ­ரிக்க நாடு­களில் இந்த சந்­திர கிர­கணம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில், ஐரோப்பா, தென் மற்றும் கிழக்கு ஆசியா, ஆபி­ரிக்கா, ஆர்ட்டிக் பிராந்­தியம், பசுபிக், அத்­தி­லாந்திக் மற்றும் இந்து சமுத்­திர பிராந்­தி­யங்­களில் இன்று நள்­ளி­ரவு முதல் இந்த சந்­திர கிர­கணம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இம்­முறை சந்­திர கிர­க­ணத்தின் போது தோன்றும் சூப்பர் சிவப்பு சந்­தி­ர­னா­னது வழ­மை­யான சந்­தி­ரனை விடவும் பெரி­தாக செந்­நிற ஔியுடன் காணப்­ப­டு­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும்.

இந்­நி­லையில் இந்த சந்­திர கிர­கணம் தோன்றும் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்கள் அந்த சிவப்பு நிற சந்­தி­ரனை நிழல் விழுங்­கு­வதை அவ­தா­னிக்க முடியும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

1900 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் இத்­த­கைய சந்­திர கிர­க­ணங்கள் 5 மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளன.இதற்கு முன் 1982 ஆம் ஆண்­டி­லேயே இத்­த­கைய சிவப்பு நிற சூப்பர் சந்­திரன் தோன்றும் கிர­கணம் இடம்­பெற்­றி­ருந்­தது.

அந்த வகையில் கடந்த 33 வருட காலத்­திற்குள் பிறந்­த­வர்­க­ளுக்கு முதல் தட­வை­யாக இத்­த­கைய அரிய சந்­திர கிர­க­ணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­தி­ர­னுக்கும் சூரி­ய­னுக்­கு­மி­டையில் பூமி வரு­கையில் இந்த அரிய சந்­திர கிர­கணம் ஏற்­ப­டு­கின்­றது. இதன்­போது சூரிய ஔி சந்­தி­ரனை நேர­டி­யாக அடை­யாது பூமியின் வளி­மண்­ட­லத்­தி­னூ­டாக வளைந்து சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பை அடைகிறது. இதன் காரணமாக சந்திரன் சிவப்பு நிறத்தில் ஔிர்கிறது.
எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரை இத்தகைய அரிய சந்திர கிரகணமொன்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.