எனது வீட்டிலும் களவு போகிறது - பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு
sireku
இலங்கைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதானது கவலைக்குரிய விடயமாகும். 'எதனோல்" எனும் போதைப் பொருளை நான் கண்டது கூடக் கிடையாது. எப்படியிருப்பினும், தவறிழைத்தவர் பிரதமராகவே இருந்தாலும் தூக்கில் இடப்பட வேண்டும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறக்குமதி கள், ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் கூறுகையில்,
இலங்கைக்குள் 'எதனோல்" உள்ளிட்ட போதைப்பொருள் கொண்டுவரப்படுவதானது கவலைக்குரிய விடயமாகும். இவற்றை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. அதனால், அதனைப் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கின்றது.
எனது செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தை வைத்து பிரதமர் போதைப்பொருள் கடத்துகிறார் எனக் கூறி இங்கு அரசியல் செய்கின்றனர். இவ்விடயத்தில் நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. கத்தியால் குத்தினாலும் கூட நான் மனம் தளர்ந்துவிட மாட்டேன். நான் தவறிழைத்திருந்தால் அதனைத் தெரிவிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
நல்லவழியிலேயோ கெட்டவழியிலோ நான் பணம் சம்பாதித்தது கிடையாது. நான் சம்பாதிக்கும் தேவையும் இல்லை. எனது தோட்டத்தில் கோப்பி, மிளகு போன்ற பயிர்களை களவாடிச் செல்கின்றனர். எனினும், அதுபற்றி நான் கேட்பது கிடையாது.
போதைப்பொருள் விடயத்தில் சிங்கப்பூரைப் போன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதமரே குற்றமிழைத்திருந்தாலும் தூக்கில் இடப்பட வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இல்லா விட்டால் நாடு நாசமாகி விடும் என்றார்.
இலங்கைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதானது கவலைக்குரிய விடயமாகும். 'எதனோல்" எனும் போதைப் பொருளை நான் கண்டது கூடக் கிடையாது. எப்படியிருப்பினும், தவறிழைத்தவர் பிரதமராகவே இருந்தாலும் தூக்கில் இடப்பட வேண்டும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறக்குமதி கள், ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் கூறுகையில்,
இலங்கைக்குள் 'எதனோல்" உள்ளிட்ட போதைப்பொருள் கொண்டுவரப்படுவதானது கவலைக்குரிய விடயமாகும். இவற்றை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. அதனால், அதனைப் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கின்றது.
எனது செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தை வைத்து பிரதமர் போதைப்பொருள் கடத்துகிறார் எனக் கூறி இங்கு அரசியல் செய்கின்றனர். இவ்விடயத்தில் நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. கத்தியால் குத்தினாலும் கூட நான் மனம் தளர்ந்துவிட மாட்டேன். நான் தவறிழைத்திருந்தால் அதனைத் தெரிவிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
நல்லவழியிலேயோ கெட்டவழியிலோ நான் பணம் சம்பாதித்தது கிடையாது. நான் சம்பாதிக்கும் தேவையும் இல்லை. எனது தோட்டத்தில் கோப்பி, மிளகு போன்ற பயிர்களை களவாடிச் செல்கின்றனர். எனினும், அதுபற்றி நான் கேட்பது கிடையாது.
போதைப்பொருள் விடயத்தில் சிங்கப்பூரைப் போன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதமரே குற்றமிழைத்திருந்தாலும் தூக்கில் இடப்பட வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இல்லா விட்டால் நாடு நாசமாகி விடும் என்றார்.
0 Comments