sireku

வரதட்சணையாக 10 இலட்சம் பேஸ்புக் லைக்ஸ்..!

ஏமன் நாட்டில் தனது மகளுக்குரிய மணக்கொடை (வரதட்சணை) யாக, தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 இலட்சம் விருப்பங்கள் (லைக்ஸ்) பெற்றுத் தரும்படி மணப்பெண்ணின் தந்தை தன் வருங்கால மருமகனிடம் கோரியுள்ளார்.

இதன் பொருட்டு மணமகன் ஒரு மாதமோ, ஓர் ஆண்டோ, ஈராண்டோ எடுத்துக்கொள்ளவும் அவகாசம் அளித்துள்ளார்.

முஸ்லிம்கள் நிறைந்த ஏமன் நாட்டில் இஸ்லாம் மத நெறிப்படி மணப்பெண்ணுக்குத்தான் மணமகன் வரதட்சணை தரவேண்டியுள்ளது.  ஏழை நாடான ஏமனில் மணப்பெண்கள் கோரும் மஹர் எனப்படும் மணக்கொடையைத் தர இயலாத நிலையில் பல வாலிபர்கள் உள்ளனர்.

ஏமனின் தாய்ஸ் நகரைச் சேர்ந்த கவிஞர் சலீம் ஆயுஷ் என்பவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை இதுவரை 30,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சலீம் ஆயுஷுடைய மகளை மணக்க விரும்பிக் கேட்ட வாலிபர் ஒருவரிடம் சலீம் ஆயுஷ் வைத்துள்ள விநோதமான கோரிக்கையாக, தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு சுமார் 10 இலட்சம் விருப்பங்கள் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக ஒரு மாதமோ, ஓராண்டோ அல்லதோ ஈராண்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
.அப்படி 10,இலட்சம் விருப்பங்கள் பெற்றுத்தந்தால், தனது மகளை அந்த வாலிபருக்கே மணமுடித்து வைப்பதாக சலீம் ஆயுஷ் தெரிவித்துள்ளார்.