தம்பலகாம(TDDF)மக்களின் விழிப்புணர்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ள அதேவேளை,சமூகத்தின் ஒற்றுமைக்கான பயணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

இலங்கையின் அரசியல் கட்சிகளும் நடமுறையில் இருக்கின்றதேர்தல் முறையும் இனங்களுக்கிடையே மோதலையும் அத்துமீறிய அதிகார  மேலாதிக்கத்தையும் தோற்றுவித்துள்ளது

கடந்தகாலங்களில் தேசிய மற்றும் முஸ்லீம் கட்சிகளில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்பட்டதில் இந்த மக்களின் பங்களிப்பும் அர்ப்பணமும் வரலாறாகும்.
கிண்ணியாவின் உடன் பிறப்புகள் வாழ்கின்ற புனிதபூமி.

பொருளாதாரத்தில் வேளாண்மை,ஆடு மாடு மற்றும் விவசாயத்துறை மூலம் தன்நிறைவு கண்ட பிரதேசம்.

அரசியலில் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களை விட கிண்ணியாவின் பலதலமைத்துவங்களுக்கு வரலாற்று ரீதியாக பலமாகவும் களமாகவும் விளங்கும் சரித்திர பூமி.

மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் போக்குவரத்திற்கும் இடைத்தரகராக விளங்கும் இடம்.

அண்மைக்காலமாக பல படித்த, முற்போக்கு இளைஞர்கள் மற்றும் மார்க்கம் சார்ந்தவர்களை முதனிலைப்படுத்தி வருகிறது.குறிப்பாக அரசியல்ரீதியாக விழிப்புணர்வும் ஆர்வமும் அதிகரித்துள்ளது, ஆரோக்கியமான சமூக வளர்ச்சியை நோக்கிய பயணத்தை இந்தப் பிரதேசத்தில் காணலாம்.

மறுபுறம் துரதிஸ்டவசமாக அரசியலை வியாபாரமாகவும், விளம்பரமாகவும் நடாத்துகின்றவர்களின் அத்துமீற்கள் அதிகரித்துள்ளது,பிரதேச ஒற்றுமையை சீரழித்து தமது சொந்த வயிற்றை நிரப்ப பலஅரசியல்வாதிகள் தினம் முகாமிடுகின்றனர்,இந்த வங்குரோத்து அரசியல் தான் இந்த மக்களின் மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

இவர்களின் சுயநலமிக்கதும்,வங்குரோத்தான செயற்பாடுகளால் இப்பிரதேச இளைஞர்கள் மத்தியில் கருத்து ஒறுமைப்பாட்டுக்கான கோஷம் எழுந்துள்ளது.

இது நாளை பிரதேசவாதமாக மாறினால் அதற்கான பொறுப்பை இந்த மாவட்ட அரசியல்தலமைகளே ஏற்கவேண்டும்,அதுமட்டுமல்ல அதற்காக எதிர்காலத்தில் அதிகமான விலை கொடுக்க வேண்டிவரும்.

ஏனெனில் தற்போது இந்த செயற்பாடுகள் பிரதேசவாதம் மற்றும் பிற்போக்கான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ஆகவே வெறுமனே வாக்குகளுக்காக இப்பிரதேச மக்களை பகடக்காய்களாக கருதும் நிலை மாற்றமடைய வேண்டும்,இதற்கான மனபக்குவத்தை அரசியல் தலமைகள் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே அரசியலிலும் அபிவிருத்தியிலும் இப்பிரேதச மக்களை பங்காளிகளாக மாற்ற வேண்டும்.

அவர்களின் வாக்குகளுக்கு அதிகார பலம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாற்றம் கண்டுள்ளது.

அதேநேரம் இப்பிரதேச மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கையை பல்வேறுபட்ட சமூக மற்றும் மதச்சார்புடையவர்களுடன் பேசலாம், நமக்குள் உருவாகும் முரண்பாடுகளால் இலாபம் அடைவது மற்றைய இரண்டு இனங்களுமே.நாம் ஒற்றமையாக விட்டுக் கொடுப்பு மற்றும் பரிந்துணர்வுடன் செயற்படுவதான் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரம் மற்றும் தலமைத்துவத்தை நமக்கே உரியதாக்கலாம்.

ஆகவே இந்தப் அமைப்பை முன்னெடுப்பவர்கள் தமக்கான ஆதரவைப் பெறுவதற்கும்,கிண்ணியா சார்பான அரசியல் தலமைகள் தமக்கான அனுதாபத்தை பெறவும்??இந்த மக்களின் விழிப்புணர்வை பிரதேசவாதமாக முன்னெடுக்கக்கூடாது.மாறாக முன்னையதைவிட பலத்தையும் அதிகாரத்தையும் உறிதிப்படுத்த மக்களின் ஒற்றுமையை சாதகமாக் பயன்படுத்த வேண்டும்.இல்லாவிடின் நாளைய சமூகத்தின் முதல் துரோகிகளாக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிக்க நேரிடும்.

( இது சட்டத்தரணி Fahmy Mohamed அவர்களின் பேஸ்புக் பதிவில் இருந்து தனிக்கை செய்யப்பட்ட ஒரு பகுதி.)