sireku


திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை வைக்க எடுக்கப்பட்ட முயற்சி யொன்று பொது மக்களின் முயற்சியால் தோல்வியடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று 13 ஞாயிற்றுக்கிழமை மாலை சிலை ஒன்றை வேன் ஒன்றிலிருந்து கொண்டு வந்த இவர்கள்

இச் சிலை முள்ளிப்பொத்தானை 96 சந்தி ஊடாக 04 ஆம் வாய்க்கல் மற்றும் 10 குளனிக்கும் பிரியும் முச்சந்தியில் வை வீதியென அழைக்கப் படும் இடத்திலே வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

பின்னர் அப் பகுதியில் மக்கள் ஒன்று திரண்டு அங்கு விரைந்த பொலிஸாரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு இச் சிலை வைப்பதை தடை செய்ததாகவும் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் 4 ஆம் வாய்க்கல் பகுதியில் எல்லை பாதுகாவலர்கள் சிலர் அங்குள்ளனர். அதற்கு ஏற்கனவே சிலை ஒன்று காணப்பட்டன.

அதனை புத்தி சுவாதின முற்ற ஒருவர் அதன் தலையை உடைத்து விட்டார் எனவும் அதற்கு பதில்கவே இச் சிலையை முச்சந்தியில் வைப்பதற்கு முனைந்ததாகவும் கூறப்படுகிறது

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...