sireku


சிறுபான்மையினரை கோடிட்டு காட்டும் இரண்டு நிறங்கள் அற்ற தேசியக்கொடியை பயன்படுத்தியமைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது இந்தக்கொடியை அழகப்பெரும உட்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்தநிலையில் இது வருந்ததக்க செயல் என்று குறிப்பிட்டுள்ள டளஸ் அழகப்பெரும, குறித்த தேசியக்கொடிகளை ஏந்தியிருந்தமை காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பை கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த மன்னிப்பை கோரினார்.

நன்றி .tamilwin