விபத்துக்குள்ளான ஜேர்மனி விமானம்:150 பயணிகள் பலி?
sireku
ஜேர்மனி விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 150 பயணிகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரிலிருந்து, ஜேர்மனின் டுசெல்டார்ப் (Düsseldorf) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜேர்மனி விங்கிஸ் A320 German Wings என்ற விமானம் சற்று முன் பிரான்ஸ் நாட்டின் Digne மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விமானம் அப்பர் பிலோன்(Upper Bléone) என்ற பள்ளதாக்கில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தை General Directorate of Civil Aviation அலுவலகம் உறுதி செய்துள்ளது.
தற்போது விபத்தை உறுதி செய்த பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சரான பெர்னாடு கசினுவே(Bernard Cazeneuve) மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அவர் பார்சிலோனாவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், அங்கே விபத்தான விமானத்தின் பாகங்களை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ்(Manuel Valls) பேசுகையில், விமானத்தில் பயணித்த 142 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் இறந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் எந்த பயணியும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலாண்டே(Francois Hollande)கூறியுள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கடைசியாக 10:47 (09:47 GMT) மணியளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பை விடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
http://www.newsonews.com/
0 Comments