sireku

வடரேக விஜித தேரர் இனந்தெரியாதோரால் கடத்தப் பட்டு தாக்குதல்.
மூர்ச்சையான நிலையில் பாணந் துறை பொல்கொட ஆற்று ஓரத்தில் எறியப் பட்டுள்ளார்.

ஜாதிக பல சேனா நிறுவுனரும். மஹியங்கனை மகாவெளி ராஜ மஹா விகாராதிபதியுமான வடரேக விஜித தேரர் இனந்தெரியாதோரால் கடத்தப் பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மூர்ச்சையான நிலையில் பாணந் துறை (கிறன பாலத்திட்கடியில்) ஆற்ரங்கரையில் எறியப் பட்டுள்ளார்.

தற்போது இவர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப் பட்டு வருகின்றார்.

இவர் பொதுபல சேனா தீவிவாத செயற்பாடுகளுக்கு எதிராக நாடெங்கிலும் பாரியளவில் குரல் கொடுத்து வந்த நிலையில் தாக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ எம் எம் முஸம்மில் – பதுளை.