திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம்! சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
sireku

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கையாளவுள்ளது. இதற்காக கொழும்பிலிருந்த விசேட குழு ஒன்று மன்னாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கையாளவுள்ளது. இதற்காக கொழும்பிலிருந்த விசேட குழு ஒன்று மன்னாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் மாதம் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து இந்த புதைக்குழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று 22ம் திகதியுடன் 11 தடவைகள் தோண்டப்பட்டன. நேற்று புதன்கிழமையும் மூன்று எலும்பக்கூடுகள் மீட்கப்பட்டன.
இந்த மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 43 எலும்பக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று மீட்பு குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதற்கு அப்பால் சிறுவர்களின் பற்கள், பெண்கள் அணியும் முத்துமாலைகளின் முத்துகள், உடைந்த வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று மேற்படி புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் அங்கம் வகிக்கும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரத்ன நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அத்துடன், இந்த மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments