sireku

நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் காப்பற்றப்பட்டனர்; திருமலையில் சம்பவம்


திருகோணமலை, உப்புவெளி பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் மேலும் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பகுதியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த சிறுவர்களே நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.