சிறுவயது பாடசாலை மாணவிகள் மூவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 14 வயது மாணவன்
sireku
சிறுவயது பாடசாலை மாணவிகள் மூவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் 14 வயது மாணவன் ஒருவனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டு பிரதேச பாடசாலை ஒன்றில் பயிலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் மூவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
10 வயதுடைய குறித்த சிறுமிகளான மாணவிகள் மூவரும் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் விளையாடுவதற்காக ஒன்று சேரும் சந்தர்ப்பங்களில் அவ்விடத்திற்கு வரும் சந்தேக நபரான மாணவன் அச்சிறுமிகளுள் ஒவ்வொருவராக ஏமாற்றி அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ள விடயம் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடந்த பல மாதங்களாக அவ்வப்போது இவ்வாறு தம்மை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகவும் அச்சிறுமிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை அறிந்துகொண்ட சிறுமி ஒருவரின் பெற்றோர் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது சந்தேகநபரின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை தெரியவந்ததையடுத்து சிறுமிகளின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சிலாபம் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments